Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, May 06, 2009

உதகமண்டலம் ஏரியின் தற்போதைய நிலை...

சென்னையின் கொடூர வெயிலில் இருந்து தப்பி உதகமண்டலம் சென்று சற்று இளைப்பாறிவிட்டு வரலாம் என்று என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அறைக்குச் சென்று குளித்துவிட்டு உதகை ஏரிக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். என் நண்பர்கள் படகு சவாரி செய்ய ஆசைப்பட்டார்கள். எனக்கு ஏனோ படகு சவாரி செய்ய வேண்டும் என்று தோனவில்லை. அவர்களை வழியனுப்பி விட்டு நானும் எனது மற்றொரு நண்பனும் அவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுதுதான் ஏரியை நன்கு கவனித்தேன். கரையோரம் இரண்டு மீண்கள் இறந்துகிடந்தன. அருகிலிருந்த படகோட்டியிடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது, ஊட்டி ஏரியிலும் பாழாய்போனவர்கள் கழிவுநீரை கலந்துவிட்டனர்.


ஒன்றும் சொல்வதற்கில்லை!!! நீங்களும் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய நெர்ந்ததெனில், கையை ஏரியில் விட்டு விடாதீர்கள். நிறைய பேர் இதை அறியாமல் ஏரியின் நீரில் கையை வைத்து விளையாடுகிறார்கள்.

Tuesday, May 20, 2008

ரோபோடிக்ஸ் பிரியர்களுக்கு...

சிறு வயதிலிருந்து பலருக்கு ரோபோக்கள் மேல் ஆர்வம் அதிகம் இருந்திருக்கும். ஆங்கில சினிமாக்களில் பார்த்து குதூகலித்திருந்தோம். வெளி நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ரோபோக்கள் செய்து மகிழும் நபர்கள் மிகவும் குறைவு தான். எனினும், சமீப காலமாக இந்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு ரோபோவை உருவாக்க mechanical மற்றும் electronics துறையில் அனுபவம் இருக்க வேண்டும். தவிர creative mind வேண்டும். சிறு குழந்தைகள் ரோபோ வடிவமைத்து ப்ரோக்ராம் பன்னும் அளவிற்கு ஒரு Robotics kitஐ, Lego நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதை மேலை நாடுகளில் 10 வய்து சிறுவர் சிறுமியர் வாங்கி வித விதமாக ரோபோக்களை உருவாக்கி வெளுத்து கட்டுகிறார்கள்.

எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. சென்ற முறை அமெரிக்கா சென்ற பொழுது வாங்கி வந்தேன். வார விடுமுறைகள் இப்பொழுது திருப்திகரமாக கரைகிறது.

நீங்களும் இதை வாங்க எண்ணினால் எனது ஆங்கில பதிவான இங்கு http://lexos.blogspot.com/2008/02/my-lego-mindstorms-nxt-kit.html செல்லவும். கூடுதல் விவரங்கள் கிடைக்கும்.

நான் உருவாக்கிய சில ரோபோக்களை கீழே கொடுக்கப் பட்டுள்ள யூ-டியூப் வீடியோக்களை பாருங்கள்.




Monday, May 12, 2008

கொடைக்கானல் - 1

கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன் அங்கு சென்றிருந்தேன். இதோ, அங்கே சிறைபிடித்த சில படங்கள்.












Thursday, February 14, 2008

கோயம்புத்தூரில் "ஏலியன்ஸ்" உலா???

Stephen Spielberg, E.T. என்றொரு படம் இயற்றினார். வெளி கிரகத்தில் இருந்து "ஏலியன்ஸ்" வ‌ந்து செல்லும் பொழுது, ஒரு "ஏலியன்" மட்டும் பூமியில் மாட்டிக் கொள்ளும். நாம் அந்த படத்தை ரசித்தோம். ஆனால், நிஜத்திலும் அப்படியே இருக்குமா என்ன?

UFO என்றால் Unidentified Flying Objects என்று அர்த்தம். இதுவரை UFOக்கள், இந்தியாவில் யாரும் பார்த்ததாக தகவல்கள் இல்லை. ஆனால், கோயம்புத்தூரில் அவை தென்பட்டிருக்கிறது.

இதோ:



Monday, December 31, 2007

சாய் பாபா அவர்களின் சித்து விளையாட்டுக்கள்!!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள‌ காட்சிகளை பார்வையிடவும். சாய் பாபாவை கடவுளாக தரிசிக்கும் அன்பர்கள் பார்வைக்கு!!!

பின்குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு யாம் பொறுப்பல்ல.












Thursday, December 20, 2007

காட்டு வாழ்க்கை

காட்டிற்குள் செல்வது இதுவே எனக்கு முதல் அனுபவம். காட்டு வாழ்கை நாட்டில் கிடைக்காது என்றாலும், காட்டிற்குச் செல்லும் முன் நம்மை தயார் படுத்திச் செல்ல வேண்டும். அதுவும், ஓர் இரவு அங்கு தங்குவதென்றால் சாப்பிடுவதற்குத் தேவையான வற்றையும் தூக்கிச் செல்ல வேண்டும்.

பாம்புகள், யானைகள், காட்டு எருமைகள் ஆகிய விலங்குகளை நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்றே மணதை தைரியப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால், ஏமாற்றம் தான் மிச்சம். நான் என்னிய அளவிற்கு பயமாக இல்லை. எனினும், அட்டை பூச்சிகளால் சிர‌மம் ஏற்பட்டது. என்னுடன் வந்த சிலரை அட்டைப் பூச்சி விட்டுவைக்கவில்லை. அவர்களின் இரத்தத்தை சுவை பார்த்து விட்டது. இலைகள் மேல் நின்று நடனமாடிக் கொண்டிருக்கிறது. நாம் நடந்து செல்லும் பொழுது காலணியில் ஏறிக் கொண்டு, விரைவாக கால்களில் ஏறி இரத்தத்தை உறிந்து விடுகிறது. இதைப் பற்றி கூடுதல் தகவல் அறிய
http://en.wikipedia.org/wiki/Leech சொடுக்கவும்.

சரி, விசயத்திற்கு வருவோம். சென்னை ந(ர)க(ர) வாழ்கையை விட்டு யாரும் மிகுதியாக இல்லாத ஒரு மலைக்குச் சென்று ஒரு இரவு தங்கிவிட்டுத் திரும்பலாம் என்று யோசிக்கும் பொழுது, கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டைத் தேர்ந்தெடுத்தோம். கோழிக்கோடிலிருந்து பிரிந்து ஒரு தனி நகர அந்தஸ்து பெற்றது 1980ல். இது மேற்குத் தொடற்சி மலையில் உள்ள ஒரு நகரமாகும்.

வெள்ளி மதியமே அலுவலகத்திலிருந்து விடுப்பெடுத்து, சென்னையிலிருந்து கோழிகோடு செல்லும் இரயிலில் எங்கள் பயண‌த்தை தொடங்கினோம். அதிகாலை 5 ம‌ணிக்கு கோழிகோட்டில் இற‌ங்கி கல்ப்பேட்டா செல்லும் பேருந்தில் ஏறினோம். 2 மணிநேர‌ பிரயாண‌த்திற்குப் பிறகு, மேப்பாடி என்னும் இடத்திற்கு மற்றொரு பேருந்தில் ஏறி காட்டுப் பயண‌ம் தொடங்கும் இடத்தை 11 மணிக்குச் சென்றடைந்தோம்.

அடிக்கடி எங்களைப் போல் சிலர் இங்கு வந்து செல்வதால் பாதை சரியாகவே அமைந்திருந்தது. சில இடங்களில் மட்டும், சற்று சிர‌மப்பட்டு செல்ல வேண்டியிருந்தது. ஆங்காங்கே மரங்கள் உடைந்து பாதையை மறைத்துக் கொண்டு கிடந்தன. 2 மணி நேர கடிண நடைக்குப் பின்னர், உணவு உண்ண ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். மலைகளின் நடுவே அமர்ந்து நாங்கள் கொண்டு வந்திருந்த உணவை அருந்தினோம். அங்கிருந்து சுற்றி மரங்களாக அமைந்தது, மணதிற்கு அமைதியைத் தந்தது.


பிறகு, 3 மணி நேர கடின நடைக்குப் பின்னர் சரியாக 5:30 மணிக்கு மலை உச்சியை அடைந்தோம். இது வெள்ளரி மலை என்று அழைக்கப் படுகிறது. 6 மணிக்கெல்லாம் குளிர ஆரம்பித்துவிட்டது.

எங்களுடன் வந்த வழிகாட்டுனர்கள், விறகுகளை சேகரித்து பின் தீ மூட்டினர். நன்றாக குளிர் காய்ந்து, கூடாரங்கள் அமைத்து கண்ணுறங்கி, பின் காலை எழுந்து கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 4 மணி நேர கடிண நடைக்குப் பின், ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தோம்.

இப்பொழுது, காட்டு வழி பயணத்தை நினைத்துப் பார்த்தால், கனவு போல் உள்ளது. இங்கு சிறை பிடித்த சில வண்ணப் படங்களை பார்வையிட கீழே கொடுக்கப் பட்ட சுட்டியை சொடுக்கவும்.


VellariMala Trek - Dec '07

Friday, December 07, 2007

வெடிப்பு நிகழும் !!!

அமுக்கு, அமுக்கு
இன்னும் சற்றே அதிகம் அமுக்கு
அழுத்தம் அதிகரிக்கும்!
வெடிப்பு நிகழும்!

சுடு சுடு
நூறுபேர் விழட்டும்
துப்பாக்கியைச் சுழற்றிச் சுடு
ஆயிரக் கணக்கில் அவர்கள் விழட்டும்
பிறகு தான்
லெட்சம் லெட்சமாய் அணிகள் திரளும்
துப்பாக்கிகள் நொருங்கிச் சிதறும்.

மயிலாசனத்தின் அரசியல் அநாதையை
நீ அறியாயா?
நீங்கள் குருடர்
பிறவிக் குருடர்
வரலாறு உமக்குத் தெரிவதே இல்லை.

1980ல், எம்.ஏ.நுஃமான் இலங்கை ராணுவத்தைப் பார்த்து எழுதியது!!!

Tuesday, August 29, 2006

இதுவல்லவோ நட்பு???

சமீபத்தில், எனது நன்பர் ஒருவரிடம் உரையாற்றிக்கொண்டிருந்த பொழுது, அவர் படித்த ஒரு ஆங்கில கதை பற்றி என்னிடம் கூறினார். அது எனது மனதை வெகுவாக பாதித்து விட்டது. படித்துப் பாருங்கள். உங்களைக் கூட அந்த கதை பாதிக்கலாம்.

இரண்டு நன்பர்கள் போர்க்களத்தில் ஒன்றாக சென்று போர் புரிகின்றனர். இருவரும், ஒருவரை விட்டு ஒருவர் போருக்குச் செல்ல மாட்டார்கள். ஏனென்றால், போர்க்களத்தில் ஒருவர் மடிந்து ஒருவர் உயிர் வாழ்வதை இருவரும் விரும்பவில்லை.

ஓர் நாள், அந்த இரண்டு நன்பர்களில் ஒருவனுக்கு, போர்க்களத்தில் காயம் பட்டது. காயம் சிறிது என்றாலும், அவனால் மருநாள் போர்க்களத்திற்கு செல்லமுடியவில்லை. தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவனை அவனது நன்பன் சந்தித்து, "நான் சென்று வருகிறேன். உன்னால் இன்று போர்க்கள‌த்திற்கு வர முடியாது. ஆதலால், நீ ஓய்வெடுத்துக் கொள். மாலை உன்னை சீக்கிரமாக வந்து சந்திப்பேன்" என்று கூறிவிட்டுச் சென்றான்.

போர்க்களத்தில், எதிர்பாராத விதமாக இவன் சென்ற குழுவை எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். என்ன செய்வதென்று தடுமாறிய போது, இவர்கள் மீது எதிரிகள் குண்டுகளை மழையாக பொழிந்தார்கள். குண்டடி பட்டு நமது நன்பன் கீழே விழுந்தான். ஆயினும், உயிர் அப்பொழுதே பிரியவில்லை.

இந்த தகவலை அறிந்த அவனது நன்பன், "நான் சென்று என் நன்பனைப் பார்க்க வேண்டும். அவன் என‌க்காக உயிரைப் பிடித்து காத்துக்கொண்டிருப்பான்." என்று கூறினான். அதற்கு அவனது மேலதிகாரிகள் மறுத்துவிட்டனர். "நீ காயம் பட்டுள்ளாய். போர்க்களம் சென்றால் நீயும் உயிர் விட வேண்டியது தான்" என்றனர்.

அவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல், தனது காயங்களை மதிக்காமல், அவன் போர்க்களம் சென்றான். போர்களத்தில், காயம் பட்டு சுயநினைவை இழந்திருந்த தனது நன்பனை மடியில் ஏந்திக் கொண்டு கன்னீர் விட்டு கதறி அழுதான்.

அப்பொழுது, பூ மலர்வதைப் போல் தனது கண்களைத் திறந்து அவன் நன்பன், "வந்துவிட்டாயா? நான் உனக்காகத் தான் காத்திருந்தேன். நீ... நீ வருவாய்... என்று நான் அறிவேன்." என்று கூறியதும், வாடிய பூ போல் தனது உயிரை நன்பன் மடி மீதே விட்டான்.


இதைக் கேட்டதும், அவன‌து நன்பன் அவனை இறுக கட்டிக் கொண்டு, வானத்துக்கும் பூமிக்கும் சேர்த்து அழுதான். எதிர் பாராதவிதமாக, அவன் பின்னால் இருந்து பாய்ந்து வந்த குண்டு, அவன் உயிரயும் சேர்த்து கொண்டு சென்றது.

ஏற்கெனவே, குண்டடி பட்டிருந்த இவனை அந்த குண்டு வெகு நேரம் விட்டு வைக்கவில்லை. அவன் விட்டது தனது உயிரையென்றாலும், தனது நன்பனை விட்டு விடவில்லை. அவனை இறுக கட்டிக் கொண்டே மண்ணில் விழுந்தான்.

அன்று இற‌ந்தது இரு உயிர்கள் என்றாலும், அவர்கள் போற்றி வந்த நட்பு அல்ல.

Tuesday, August 22, 2006

காஞ்சி ஏகம்பரநாதர் கோயில்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் சென்று ஆலய தரிசனம் பெற்று திரும்பியிருந்தேன். அங்குள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களைப் பற்றி புகைப்படங்களுடன் தங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில், பழமை வாய்ந்த ஏகம்பரநாதர் கோயிலை பற்றி இங்கு எழுதுகிறேன். இந்தக் கோயில் 3500 வருட கால வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள கோயில் கோபுரம் 192 அடி உயரமாக அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இது தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கோபுரமாக போற்றப்படுகிறது.

கோயில் கோபுரம்


கோபுரத்திற்கு ஈடு கொடுக்கும் கதவு.

கோயிலினுள்ளே...


வரலாறு:
இந்தக் கோயிலின் வரலாறு மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. சுமார், 3500 வருடங்களுக்கு முன்னர் சிவபெருமான் கைலாசத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது, பார்வதி தேவி சற்று விளையாட்டிற்காக பரமசிவனின் கண்களை மூடியுள்ளார். இதனால் கோபமுற்ற சிவன், பார்வதியை தண்டனை அடையச் செய்ய பூலோகத்திற்கு அனுப்பினார்.

பூமிக்கு வந்த பார்வதி, ஒரு நதிக்கரையில், மாமரத்தடியில் ஈர மன்னால் சிவலிங்கத்தை உருவாக்கி வணங்கி வந்தார். பார்வதியின் பக்தியை சோதிக்க, சிவன் பலத்த மழையையும் காற்றையும் பூமியில் வீசச் செய்தார். இதிலிருந்து லிங்கத்தை காப்பதற்கு, பார்வதி பெரிதும் போராடியுள்ளார்.

இறுதியில், பார்வதி முன்பு சிவன் தோன்றி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். இப்பொழுது இருக்கும் ஏகம்பரநாதர் கோயில், அந்த இடத்திலேயே கட்டப் பெற்றுள்ளது.

இக்கோயிலுக்குள்ளே, பார்வதி எந்த மாமரத்தடியில் சிவலிங்கத்தை வணங்கி வந்தாரோ, அந்த மரம் சென்ற ஆண்டுவரை இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால், இப்பொழுது அந்த மரத்தின் கண்றையே பார்க்க முடிகிறது.

அந்த மரம் பல சிறப்புகளை வாய்த்து வந்துள்ளது. அந்த மரத்தில் நான்கு கிளைகள் உண்டு என்றும், ஒவ்வோர் கிளையில் உள்ள மாம்பழங்களும் ஒவ்வோர் சுவை உடையதென்றும் கூறப்படுகிறது. இதில் காய்க்கும் பழத்தை உண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.


பார்வதி எந்த நதிக்கரையில் அமர்ந்து சிவபெருமானை வண‌ங்கி வந்தாரோ, அந்த நதி தற்பொழுது சிறு குளமாகவே காட்சியளிக்கிறது.

Monday, August 21, 2006

நீயும் என் மகனா???

சனிக் கிழமை, கும்பகோணத்திற்கு அருகிலுள்ள "சூர்யனார்" கோயிலிற்குச் சென்றிருந்தேன். கோயில் ப்ரார்த்தனையை முடித்து விட்டு வெளியில் வரும் பொழுது, ஒரு கிழவி சாலையில் நடந்து செல்கின்றவர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.

நான் எதிர்பார்த்தது போல், என்னிடமும் பிச்சை கேட்டாள். நான் ஒன்றுமே கூறாமல், முன்னே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது அவள், "அய்யா, என்னயா நீயும் என் பிள்ளை போல் கண்டுகொள்ளாமல் செல்கிறாயே?" என்று கேட்டாள். இதை கேட்டதும் என‌க்குத் தூக்கி வாறிப்போட்டது.

நான் என்ன செய்ய முடியும்? கையில் வைத்திருந்த இரண்டு ரூபாயை அவளிடம் கொடுத்து, உள்ளத்தில் சோகத்தை அவளிடம் வாங்கிக் கொண்டு நடந்தேன்.

Friday, August 18, 2006

ஜனாதிபதியின் எளிமை!!!

சமீபத்தில், குடியரசுத் தலைவர் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகளுடன் உறையாடிக்கொண்டிருந்த‌ பொழுது, ஒரு குழந்தை, "பிற்காலத்தில், மக்கள் உங்களை விஞ்ஞானி என்று கூறுவதை விரும்புவீர்களா அல்லது இந்திய குடியரசுத் தலைவர் என்று கூறுவதை விரும்புவீர்களா?" என்று கேட்டது.

அதற்கு அவர், "பிற்காலத்தில், மக்கள் என்னை நல்ல மனிதன் என்று கூறுவதையே விரும்புவேன்" என்றார்.

இது சிறிய பதில் என்றாலும் மிகுந்த கருதாழ‌த்தைக் கொண்டது. இதை மக்கள் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்கள் வாழ்கையில் பின்பற்ற‌ வேண்டும்.

Thursday, August 17, 2006

காலத்தைத் தாண்டி நிற்கும் காஞ்சி...

காஞ்சிபுரம்.

பழமை வாய்ந்த தமிழ் நகரங்களில் காஞ்சிபுரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சுமார் 1000 வருடங்களைத் தாண்டிய வரலாற்றைக் கொண்டது. கி.பி. 2ம் நூற்றாண்டில் இது பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்பொழுது, இங்கு கட்டப்பெற்ற பழமை வாய்ந்த கோயில்கள் ஏறாள‌ம். இதன் சிறப்பு, இன்னும் இக்கோயில் கோபுரங்கள் வின்னை முட்டிக் கொண்டு நிற்கிறது.

பிறகு, இது சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பொன்னியின் செல்வன் படித்திராதவர்களுக்கு ஒரு சிறு செய்தி. சுந்தர சோழர்களின் காலத்தில், அவருடைய புதல்வன் ஆதித்த கரிகாலன் தனது தந்தைக்காக ஒரு பொன் மாளிகையை எழுப்பியிருந்தார். ஆனால், இது காஞ்சியில் எங்குள்ளது என்பதை யாம் அறியோம் பராபரமே.

பின், சோழர்களின் கையிலிருந்து இது விஜய நகர அரசர்களின் கை மாறியது. காஞ்சி, இம்மூன்று அரசுக்கும் தலைநகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு விஷ்னு கோயில்கள் ஏறாளம் உள்ளன. சிவ ஸ்தலங்களில் புகழ் பெற்ற ஏகம்பரநாதர் கோயில் இங்கு உள்ளது. இதில், சிவபெருமானை பூமியாக வழிபடுகின்றனர்.

ஒவ்வோர் கோவில், அதன் சிறப்புகள் பற்றி வரும் பதிப்புகளில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். காஞ்சியை பல அரசுகள் ஆண்டுவந்த போதும், பல்லவர் காலத்தில் கட்டப் பெற்ற கோயில்கள் கலை நயம் மிக்கவை.

Monday, August 07, 2006

பிறப்பில் வருவது யாதென கேட்டேன்
பிறந்து பார் என இறைவன் பனித்தான்

இறப்பில் வருவது யாதென கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பனித்தான்

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பனித்தான்

அனுபவித்தே தான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்? என கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.

Thursday, July 27, 2006

எனக்குப் பிடித்த குறள்!!!

காலத்தாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தில் மானப் பெறிது.

ஒருவருக்கு தக்க காலத்தில் செய்யும் உதவி, மற்ற எல்லா உதவிகளையும் விடச்சிறந்ததாகும்.

இந்தக் குறள் எனக்கு எதனால் பிடிக்கும் என்றால், நான் தவித்துக் கொன்டிருக்கும் சில சமயங்களில் எனது நன்பர்கள் பலர் எனக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அது போலவே நானும் சில நன்பர்களுக்கு, அவர்கள் கஷ்டப்படும் சமயங்களில் உதவிகளைச் செய்திருக்கிறேன்.

பொதுவாக, ஒருவர் திருக்குறளில் வரும் 1330 குறள்களையும் நன்கு கற்று தனது வாழ்வில் பின்பற்றினால், பலர் போற்ற சிறந்த வாழ்க்கை வாழலாம்.

Wednesday, July 26, 2006

ஆனந்த விகடன்!!!

நினைக்கும் பொழுதே எவ்வளவு ஆனந்தம்? சமீப காலமாகத்தான் நான் தமிழ் வார இதழ்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொன்டேன். இரண்டு, மூன்று இதழ்களை படித்த பிறகு, விகடனே என்னிடம் முதல் மதிப்பென் பெறுகிறது. காரனம், அதன் எளிமையும் அதில் வரும் கட்டுரைகளும் தான்.

குறிப்பாக சொல்லப்போனால், அதில் நான் விரும்பிப் படிப்பது "ஹாய் மதன்", "தமிழ் மன்னே வணக்கம்", "அத்தனைக்கும் ஆசைப்படு", "வேதாந்திரி", "வல்லினம் மெல்லினம் இடையினம்". இந்த பகுதிகளில் வரும் கறுத்துகள் அனைத்தும் என்னுடன் ஒத்திருக்கிறது.

கடந்த இதழில் உடல் சம்பந்தப் பட்ட பல கட்டுரைகளை பொறித்து அசத்தி விட்டார்கள்.

செய்வதைத் தொடர்ந்து செய்யுங்கள் விகடன் அவர்களே!!!

பொன்னியின் செல்வன்!!!

பொன்னியின் செல்வன். நான் படிக்கும் முதல் தமிழ் காவியம்.

ஆகா, கல்கி மிகவும் அருமையான படைப்பாளி. தமிழ் மொழியை எவ்வளவு அருமையாக பயன்படுத்தியுள்ளார்?

குறிப்பாக, அவர் கதாப்பாத்திரங்களை செதுக்கிய விதம் மிக மிக அருமை. படிக்கும் பொழுதே நம்மை முற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

நான் ஒரே மாதத்தில் நான்கு புத்தகங்களை பதித்து முடித்து விட்டேன். இது எனக்கு புதிது. பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தால், மெதுவாக படிப்பதே எனது வழக்கம். ஆனால், கல்கி என்னை புத்தகத்துடன் கட்டிப்போட்டு விட்டார்.

என்னைப் பார்த்து எனது நன்பர்களும் இந்த அற்புதக் காவியத்தை விரும்பிப் படிக்கிறார்கள்.

இந்த காவியத்தை எனக்கு பரிசளித்த எனது அருமை நன்பன் வினு ஷங்கருக்கு எனது நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறேன்.