Wednesday, July 26, 2006

பொன்னியின் செல்வன்!!!

பொன்னியின் செல்வன். நான் படிக்கும் முதல் தமிழ் காவியம்.

ஆகா, கல்கி மிகவும் அருமையான படைப்பாளி. தமிழ் மொழியை எவ்வளவு அருமையாக பயன்படுத்தியுள்ளார்?

குறிப்பாக, அவர் கதாப்பாத்திரங்களை செதுக்கிய விதம் மிக மிக அருமை. படிக்கும் பொழுதே நம்மை முற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

நான் ஒரே மாதத்தில் நான்கு புத்தகங்களை பதித்து முடித்து விட்டேன். இது எனக்கு புதிது. பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தால், மெதுவாக படிப்பதே எனது வழக்கம். ஆனால், கல்கி என்னை புத்தகத்துடன் கட்டிப்போட்டு விட்டார்.

என்னைப் பார்த்து எனது நன்பர்களும் இந்த அற்புதக் காவியத்தை விரும்பிப் படிக்கிறார்கள்.

இந்த காவியத்தை எனக்கு பரிசளித்த எனது அருமை நன்பன் வினு ஷங்கருக்கு எனது நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறேன்.

No comments: