Monday, August 21, 2006

நீயும் என் மகனா???

சனிக் கிழமை, கும்பகோணத்திற்கு அருகிலுள்ள "சூர்யனார்" கோயிலிற்குச் சென்றிருந்தேன். கோயில் ப்ரார்த்தனையை முடித்து விட்டு வெளியில் வரும் பொழுது, ஒரு கிழவி சாலையில் நடந்து செல்கின்றவர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.

நான் எதிர்பார்த்தது போல், என்னிடமும் பிச்சை கேட்டாள். நான் ஒன்றுமே கூறாமல், முன்னே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது அவள், "அய்யா, என்னயா நீயும் என் பிள்ளை போல் கண்டுகொள்ளாமல் செல்கிறாயே?" என்று கேட்டாள். இதை கேட்டதும் என‌க்குத் தூக்கி வாறிப்போட்டது.

நான் என்ன செய்ய முடியும்? கையில் வைத்திருந்த இரண்டு ரூபாயை அவளிடம் கொடுத்து, உள்ளத்தில் சோகத்தை அவளிடம் வாங்கிக் கொண்டு நடந்தேன்.

3 comments:

Anonymous said...

manadhai thodum nigazhvu...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

படித்து முடித்தவுடன் மனது சோகமாகிப் போனது.

Dharmalakshmi alias Ranjani C said...

Very Touchy Alex ...