Thursday, August 17, 2006

காலத்தைத் தாண்டி நிற்கும் காஞ்சி...

காஞ்சிபுரம்.

பழமை வாய்ந்த தமிழ் நகரங்களில் காஞ்சிபுரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சுமார் 1000 வருடங்களைத் தாண்டிய வரலாற்றைக் கொண்டது. கி.பி. 2ம் நூற்றாண்டில் இது பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்பொழுது, இங்கு கட்டப்பெற்ற பழமை வாய்ந்த கோயில்கள் ஏறாள‌ம். இதன் சிறப்பு, இன்னும் இக்கோயில் கோபுரங்கள் வின்னை முட்டிக் கொண்டு நிற்கிறது.

பிறகு, இது சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பொன்னியின் செல்வன் படித்திராதவர்களுக்கு ஒரு சிறு செய்தி. சுந்தர சோழர்களின் காலத்தில், அவருடைய புதல்வன் ஆதித்த கரிகாலன் தனது தந்தைக்காக ஒரு பொன் மாளிகையை எழுப்பியிருந்தார். ஆனால், இது காஞ்சியில் எங்குள்ளது என்பதை யாம் அறியோம் பராபரமே.

பின், சோழர்களின் கையிலிருந்து இது விஜய நகர அரசர்களின் கை மாறியது. காஞ்சி, இம்மூன்று அரசுக்கும் தலைநகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு விஷ்னு கோயில்கள் ஏறாளம் உள்ளன. சிவ ஸ்தலங்களில் புகழ் பெற்ற ஏகம்பரநாதர் கோயில் இங்கு உள்ளது. இதில், சிவபெருமானை பூமியாக வழிபடுகின்றனர்.

ஒவ்வோர் கோவில், அதன் சிறப்புகள் பற்றி வரும் பதிப்புகளில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். காஞ்சியை பல அரசுகள் ஆண்டுவந்த போதும், பல்லவர் காலத்தில் கட்டப் பெற்ற கோயில்கள் கலை நயம் மிக்கவை.

1 comment:

Anonymous said...

short but a sensible post of kanchi...i appreciate ur attitude.keep bloggin more stuff abt tamil...