Friday, July 28, 2006

பவித்ரா!!!

பவித்ரா எனும் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அஜீத், அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படம். அந்த படத்திற்கு பாடல்களை எழுதியவர் வைரமுத்து. இசை அமைத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான்.

அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். குறிப்பாக, "உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே தாயே!!" எனத் தொடங்கும் பாடல் அற்புதமான வரிகளைக் கொன்டவை.

"வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,

வின்னைப் படைத்தான், மன்னைப் படைத்தான்,
காற்றும், நதியும், ஒளியும் படைத்தான்,

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை,

சாமி தவித்தான்.....சாமி தவித்தான், தாயை படைத்தான்"

உன்னிக்கிருஷ்னனின் இனிய குரல் இந்த பாடலிற்கு உயிரளிப்பதாக இருந்தது.

Thursday, July 27, 2006

எனக்குப் பிடித்த குறள்!!!

காலத்தாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தில் மானப் பெறிது.

ஒருவருக்கு தக்க காலத்தில் செய்யும் உதவி, மற்ற எல்லா உதவிகளையும் விடச்சிறந்ததாகும்.

இந்தக் குறள் எனக்கு எதனால் பிடிக்கும் என்றால், நான் தவித்துக் கொன்டிருக்கும் சில சமயங்களில் எனது நன்பர்கள் பலர் எனக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அது போலவே நானும் சில நன்பர்களுக்கு, அவர்கள் கஷ்டப்படும் சமயங்களில் உதவிகளைச் செய்திருக்கிறேன்.

பொதுவாக, ஒருவர் திருக்குறளில் வரும் 1330 குறள்களையும் நன்கு கற்று தனது வாழ்வில் பின்பற்றினால், பலர் போற்ற சிறந்த வாழ்க்கை வாழலாம்.

Wednesday, July 26, 2006

ஆனந்த விகடன்!!!

நினைக்கும் பொழுதே எவ்வளவு ஆனந்தம்? சமீப காலமாகத்தான் நான் தமிழ் வார இதழ்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொன்டேன். இரண்டு, மூன்று இதழ்களை படித்த பிறகு, விகடனே என்னிடம் முதல் மதிப்பென் பெறுகிறது. காரனம், அதன் எளிமையும் அதில் வரும் கட்டுரைகளும் தான்.

குறிப்பாக சொல்லப்போனால், அதில் நான் விரும்பிப் படிப்பது "ஹாய் மதன்", "தமிழ் மன்னே வணக்கம்", "அத்தனைக்கும் ஆசைப்படு", "வேதாந்திரி", "வல்லினம் மெல்லினம் இடையினம்". இந்த பகுதிகளில் வரும் கறுத்துகள் அனைத்தும் என்னுடன் ஒத்திருக்கிறது.

கடந்த இதழில் உடல் சம்பந்தப் பட்ட பல கட்டுரைகளை பொறித்து அசத்தி விட்டார்கள்.

செய்வதைத் தொடர்ந்து செய்யுங்கள் விகடன் அவர்களே!!!

பொன்னியின் செல்வன்!!!

பொன்னியின் செல்வன். நான் படிக்கும் முதல் தமிழ் காவியம்.

ஆகா, கல்கி மிகவும் அருமையான படைப்பாளி. தமிழ் மொழியை எவ்வளவு அருமையாக பயன்படுத்தியுள்ளார்?

குறிப்பாக, அவர் கதாப்பாத்திரங்களை செதுக்கிய விதம் மிக மிக அருமை. படிக்கும் பொழுதே நம்மை முற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

நான் ஒரே மாதத்தில் நான்கு புத்தகங்களை பதித்து முடித்து விட்டேன். இது எனக்கு புதிது. பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தால், மெதுவாக படிப்பதே எனது வழக்கம். ஆனால், கல்கி என்னை புத்தகத்துடன் கட்டிப்போட்டு விட்டார்.

என்னைப் பார்த்து எனது நன்பர்களும் இந்த அற்புதக் காவியத்தை விரும்பிப் படிக்கிறார்கள்.

இந்த காவியத்தை எனக்கு பரிசளித்த எனது அருமை நன்பன் வினு ஷங்கருக்கு எனது நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறேன்.

இதுவே, தமிழில் எனது முதல் பதிப்பாகும்.

இன்று முதல், "எனது பாதைகளி"ன் மூலம் நான் கடந்து வரும் பாதைகள், நன்பர்கள், நிகழ்வுகள், அவற்றின் மூலம் நான் கற்றுக்கொள்வது போன்றவற்றை இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

இதன் மூலம் தகடூர் எனும் மொழிமாற்றியை வடிவமைத்த கோபிக்கு எனது நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன்!!!