Wednesday, May 06, 2009

உதகமண்டலம் ஏரியின் தற்போதைய நிலை...

சென்னையின் கொடூர வெயிலில் இருந்து தப்பி உதகமண்டலம் சென்று சற்று இளைப்பாறிவிட்டு வரலாம் என்று என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அறைக்குச் சென்று குளித்துவிட்டு உதகை ஏரிக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். என் நண்பர்கள் படகு சவாரி செய்ய ஆசைப்பட்டார்கள். எனக்கு ஏனோ படகு சவாரி செய்ய வேண்டும் என்று தோனவில்லை. அவர்களை வழியனுப்பி விட்டு நானும் எனது மற்றொரு நண்பனும் அவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுதுதான் ஏரியை நன்கு கவனித்தேன். கரையோரம் இரண்டு மீண்கள் இறந்துகிடந்தன. அருகிலிருந்த படகோட்டியிடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது, ஊட்டி ஏரியிலும் பாழாய்போனவர்கள் கழிவுநீரை கலந்துவிட்டனர்.


ஒன்றும் சொல்வதற்கில்லை!!! நீங்களும் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய நெர்ந்ததெனில், கையை ஏரியில் விட்டு விடாதீர்கள். நிறைய பேர் இதை அறியாமல் ஏரியின் நீரில் கையை வைத்து விளையாடுகிறார்கள்.

1 comment:

ramalingam said...

ஊட்டியும் ஒரு காலத்தில் டெட் ஸீ யாக மாறி விடுமோ?