Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Friday, December 28, 2007

உயிரெழுத்து!!!

நான் மெய்யெழுத்து, நீ என் உயிரெழுத்து
நம் மெய் பொய்யாகி, உயிர் மெய்யாகி,
நாம் உயிர்மெய் எழுத்தாவது எப்பொழுது???

Thursday, January 11, 2007

மறுபக்கம்

ஏம்பா உன்னோட பையனுக்கு வேல கிடச்சிருச்சா?

ஆமாம்பா. இப்போ தான் கஷ்டப்பட்டு ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனில வேலைக்கு சேந்தான். நல்ல சம்பளம் குடுக்குறாங்க. ஆமாம், உன்னோட பையன் என்ன ஆனான்?

என்னோட பையனும் ஸாஃப்ட்வேர் கம்பெனில தாம்பா வேல பாக்குறான். இப்போ அவனுக்கு ப்ரொமோஷன்லாம் குடுத்தாங்க.

அப்படியா?

"ஆமாம். ஃப்லோர் க்ளீனரா இருந்து, இப்போ ஆபீஸ் பாயா ஆயிட்டான்ல!", தன் மகனைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டார்.